Saturday , December 9 2023
1152020

22.23 லட்சம் அகல் விளக்குகள்: கின்னஸ் சாதனை படைத்த அயோத்தி தீபோற்சவம்! | ayodhya deepotsav sets Guinness record at uttar pradesh

அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி நகரில் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் 22.23 லட்சம் விளக்குகள் தீபோற்சவ நிகழ்வை முன்னிட்டு ஒளிர்விக்கப்பட்டது. இது கின்னஸ் உலக சாதனையாகவும் அமைந்துள்ளது.

14 ஆண்டுகால வனவாசத்தை முடித்துக் கொண்டு ராமர், சீதை மற்றும் லட்சுமணன் அயோத்தி திரும்பியதாக சொல்லப்படும் வழக்கத்தின் காரணமாக அயோத்தியில் தீபோற்சவ விழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு வழக்கம் போலவே தீபோற்சவம் நடைபெற்றது. கடந்த ஆண்டு நடைபெற்ற அயோத்தி தீபோற்சவ விழாவில் 15.76 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டன. இது கின்னஸ் சாதனையாக அமைந்தது. நடப்பு ஆண்டுக்கான தீபோற்சவ விழா அதை தகர்த்துள்ளது.

கடந்த 2017 முதல் அயோத்தி நகரில் தீபோற்சவ விழா விமரிசையாக கொண்டப்பட்டு வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு அமைந்தது இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. 2017-ல் 51 ஆயிரம் விளக்குகளுடன் இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. 2019-ல் 4.10 லட்சம், 2020-ல் 6 லட்சம், 2021-ல் 9 லட்சம் என இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நடப்பு ஆண்டுக்கான தீபோற்சவ விழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத், அந்த மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல், மாநில அமைச்சர்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 54 பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் சுமார் 22.23 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டதாக கின்னஸ் உலக சாதனை அமைப்பு அங்கீகரித்து, சான்றிதழும் வழங்கி உள்ளது.

தீபோற்சவ விழாவில் வெடிக்கப்பட்ட பட்டாசு

16997279343068
கின்னஸ் சாதனை சான்றிதழை பெற்றுக் கொண்ட யோகி ஆதித்யநாத்

Thanks

Check Also

1165283

சிபிஐ விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மஹுவா மொய்த்ரா சிறை செல்வார்: சட்ட நிபுணர்கள் கருத்து | Mahua Moitra will go to jail if found guilty in CBI probe Legal experts opine

புதுடெல்லி: மஹுவா மொய்த்ரா குறித்து சட்ட நிபுணர்கள் கூறியதாவது: எம்பி பதவி பறிப்பை எதிர்த்துமஹூவா மொய்த்ரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *