திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் உள்ள 21 கோபுரங்களின் ஸ்திரத்தன்மை குறித்து தேசிய தொழில்நுட்ப நிறுவன வல்லுநர்கள் மூலம் ஆய்வு செய்யப்படும் என அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்தார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் கிழக்கு வாசல் கோபுரத்தின் (தாமோதர கிருஷ்ணன் கோபுரம்) முதல் நிலையில் உள்ள கொடுங்கை ஆக.5-ம் தேதி அதிகாலை இடிந்து விழுந்தது. கோபுரத்தில் இடிந்த பகுதியை அமைச்சர் பி.கே.சேகர் பாபு நேற்று பார்வையிட்டு, அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார்.