வேலூர்: வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று அதிகாலை முதல் நாள் முழுவதும் சாரல் மழை பெய்ததால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தென் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. வேலூரில் நேற்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. விட்டு, விட்டு பெய்து வரும் சாரல் மழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.