புதுச்சேரி / விழுப்புரம் / கடலூர்: விழுப்புரம், கடலூர் மாவட்டங் களில் 2300-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. புதுச்சேரியில் ஒரு பகுதி விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த செப்டம்பர் 18-ம் தேதி விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுமார் 1,500 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இது தவிர சிறிய அளவிலான விநா யகர் சிலைகளையும் வைத்து பொதுமக்கள் வழிபட்டனர்.