Thursday , November 30 2023
Suicide 2

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சித்த பெண்… தூத்துக்குடியில் பரபரப்பு!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சொத்து தகராறு காரணமாக கணவனுடன் சேர்ந்து வாழ விடாமல் உறவினர்கள் எதிர்ப்பதாக கூறி, பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சீவலப்பேரி அருகே உள்ள ஆலந்தா கிராமத்தை  சேர்ந்தவர் பரமசிவன். இவர் ஏற்கனவே திருமணம் ஆகி கணவனால் கைவிடப்பட்ட மீனா என்ற பெண்ணை குடும்பத்தினரின் எதிப்பை மீறி திருமணம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பரமசிவனின் குடும்பத்தினர் சொத்தில் பங்கு வேண்டும் என்றால் மீனாவை விட்டு விட்டு வர வேண்டும் என்றும் கூறியுள்ளனர். மேலும் பரமசிவனுக்கு திருமணமாகவில்லை என்றும் சான்றிதழ் எடுத்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் பரமசிவனுக்கு திருமணமாகவில்லை என்று சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இருவரும் பிரிந்து சென்றால் தான் சொத்தில் பங்கு தருவோம் என்று மிரட்டும் குடும்பத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி பரமசிவன், மீனா தம்பதியினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி

இதையும் படிங்க : நடிகை விஜயலட்சுமி புகார்.. காவல் நிலையத்தில் இன்று ஆஜராகிறார் சீமான்….

அப்போது மீனா, தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து தனது  உடலில் ஊற்றி கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த போலீசார் அவர்களை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைக்குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தியாளர் முரளி கணேஷ், தூத்துக்குடி

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Thanks

Check Also

anbil 4

வாகைக்குளம் சுங்கச்சாவடி தொடர்பாக நீதிபதிகள் கடும் அதிருப்தி

வாகைக்குளம் சுங்கச்சாவடியில் 50% கட்டணம் வசூலிக்க பிறப்பித்த ஆணையை நிறுத்தி வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது தூத்துக்குடி – நெல்லை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *