மதுரை: மதுரையில் அரசு கூர்நோக்கு இல்லம் மற்றும் அரசு மருத்துவமனை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கு கட்டுமான பணிகளை அமைச்சர் உதயநிதி ஆய்வு செய்தார்.
மதுரையில் பல்வேறு நிகழச்சிகளில் பங்கேற்க இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மதுரை வந்தார். அவர், நேற்று நள்ளிரவில் மதுரை காமராசர் சாலையில் செயல்படும் சிறார் கூர்நோக்கு இல்லம் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள சிறுவர்களுக்கு வழங்கப்படும் உணவு, உடை மற்றும் அடிப்படை வசதி குறித்து கேட்டறிந்தார். மேலும், இல்லத்திலுள்ள சமையலறை, சிறுவர்களுக்கான படுக்கை, கழிப்பறைகள் சுகாதாரமாக உள்ளதா என, ஆய்வு செய்த அமைச்சர், சிறார்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.