ஓசூர்: ஓசூரில் அடிக்கடி ஏற்படும் போக்கு வரத்து நெரிசலை சீர் செய்யும் பணியில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஈடுபட்டு வருகின்றனர். போதிய போக்குவரத்து போலீஸாரை நியமிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
தொழில் நகரான ஓசூரில் பெருகி வரும் வாகனங்களுக்கு ஏற்ப சாலை கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், குறுகிய சாலையில் நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இதனிடையே, தேன்கனிக்கோட்டை சாலையில் ரயில்வே பாலம் விரிவாக்கம் பணி நடைபெறுவதால், மேலும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.