வாஷிங்டன்: காலிஸ்தான் பிரிவினைவாதி கொலையில் இந்தியாவுக்கு சிறப்பு விதிவிலக்கு ஏதும் கிடையாது என்று அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
கனடாவுடனான உறவில் பிளவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் கருத்தை அமெரிக்கா ஏற்கவில்லை என்றும் காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை தொடர்பான விசாரணை விரைவில் அடுத்தக்கட்டத்துக்கு முன்னெடுத்துச் செல்லப்படுவதை காண விரும்புவதாகவும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார்.