Thursday , November 30 2023
1153192

நீலகிரி | மாநில எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் நக்சல் கண்காணிப்பு தீவிரம்: மாவட்ட எஸ்.பி. ஆய்வு | Nigiris Police SP inspects TN-Kerala border after Kerala Police engage suspected Maoists in gun battle

கூடலூர்: கேரளாவில் அதிரடிப் படையினர் துப்பாக்கிச் சூட்டில் மாவோயிஸ்டுகள் சிலர் காயமுற்றதாக வெளியான தகவலையடுத்து, நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தமிழக-கேரள வன எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சுந்தரவடிவேல் ஆய்வு மேற்கொண்டார்.

நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்கள் கேரளம் மற்றும் கா்நாடகா வன எல்லைகளில் அமைந்துள்ளன. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் தொடா்ந்து அதிரிகரித்து வருகிறது.

கேரள மாநிலத்தில் தண்டர்போல்ட் என்று அழைக்கப்படும் மாவோயிஸ்ட்டு தடுப்பு சிறப்பு அதிரடிப்படைக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாக கிடைத்த தகவலையடுத்து, எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பை துரிதப்படுத்துவதுடன், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சுந்தரவடிவேல் ஆய்வு செய்து காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

16999390902027

தமிழக-கேரள எல்லையில் உள்ள ஓவேலி, நாடுகாணி, சோலாடி, நம்பியார்குண்ணு, பாட்டவயல் உள்ளிட்ட அனைத்து சோதனைச் சாவடிகளிலும் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிவுரைகளை வழங்கினார்.

Thanks

Check Also

1161021

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக மதுரை குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த முடிவு | Decision to Speed Up Implementation of Madurai Drinking Water Project before Lok Sabha Elections

கூடலூர்: தேனியில் நடைபெற்று வரும் மதுரை குடிநீர் திட்டப் பணிகளை வரும் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *