Saturday , December 9 2023
Vande Bharat

திருநெல்வேலி வந்தடைந்தது வந்தே பாரத் ரயில்… நாளை சோதனை ஓட்டம்..

திருநெல்வேலிசென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வந்தே பாரத் ரயில் இன்று திருநெல்வேலி வந்தடைந்தது.

வரும் 24ஆம் தேதி முதல் திருநெல்வேலி – சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான சோதனை ஓட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் இன்று திருநெல்வேலி வந்தடைந்தது வந்தே பாரத் ரயில்.

நாளை காலை 6 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரயில் மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடைகிறது. மறு மார்க்கத்தில் மதியம் 2.40 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரயில் இரவு 10.40 மணிக்கு நெல்லை வந்தடைகிறது.

திருநெல்வேலி

திருநெல்வேலி

இதையும் படிங்க : நெல்லை – சென்னை இடையிலான வந்தே பாரத்.. எப்போது தொடக்கம்? நேர விவரங்கள் இதோ!

24 ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெறும் விழாவில் அரசு பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் நிலையில் காணொளி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Thanks

Check Also

nellai 49

ஓணம் பண்டிகையையொட்டி சிறப்பு ரயில் – தெற்கு ரயில்வே அறிவிப்பு – News18 தமிழ்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் இருந்து நெல்லை மார்க்கமாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *