பசு தானாக பால் சுரந்த அதிசயம், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் கோயில் வளாகத்தில் நிகழ்ந்துள்ளது. தொடர் விடுமுறை என்பதால், திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது கோயில் வளாகத்தில் சுற்றித் திரிந்த பசு, தானாக பால் சுரந்தது.
இதுகுறித்து அறிந்தவுடன், ஏராளமான பக்தர்கள் அங்கே சென்று பசுவை ஆச்சரியத்துடன் பார்த்தனர். பக்திப் பரவத்துடன் பசுவை தொட்டு வணங்கியதுடன், தாங்கள் வைத்திருந்த பாட்டில்களில், பாலினை பிடித்தனர். அதிசயமாக பசுவில் இருந்து தானாக வந்த பாலினை, சிலர் தங்கள் குழந்தைகளுக்கு கொடுத்தனர்.
இந்நிலையில், பால் சுரக்கக்கூடிய உணவுகளை அளவுக்கு அதிகமாக பசுவுக்கு கொடுத்தால், இதுபோன்று தானாவே பால் சுரக்கும் வாய்ப்புகள் உள்ளதாக கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
செய்தியாளர்: பி.முரளிகணேஷ்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.