Saturday , December 9 2023
1126725

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மின்சார ஊழியர்கள் தர்ணா

சென்னை: மின்வாரிய பணிகளை ஒப்பந்த நிறுவனங்களுக்கு வழங்கும் நடவடிக்கையை கைவிடுதல் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை, அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமையகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள், ஊதிய உயர்வு நிலுவைத் தொகை வழங்குதல், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புதல், மின்வாரிய பணிகளைஇ-டெண்டர் முறையில் ஒப்பந்த நிறுவனங்களுக்கு வழங்கக் கூடாது, ஸ்மார்ட் மீட்டர் பொருத்தக் கூடாது, கேங்மேன் ஊழியர்களுக்கான சலுகையை வழங்கவேண்டும் உள்ளிட்ட 11 கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர்.

Thanks

Check Also

1164932

புதுச்சேரியில் ரூ.393 கோடியில் ப்ரீபெய்டு ஸ்மார்ட் மீட்டர் பொருத்த அரசு அனுமதி – நடைமுறை என்ன? | Govt approves Rs 393 crore prepaid smart meter installation in Puducherry

புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ.393 கோடியில் ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த அரசு அனுமதி தந்துள்ளது. மின் மீட்டருக்கான பணத்தை 90 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *