நெல்லையில் கெத்து காட்டுவதாக நினைத்து, நாட்டு வெடிகுண்டு தயாரித்து வெடிக்க வைத்து வீடியோ வெளியிட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
நெல்லையில் கடந்த சில நாட்களாக குற்றச் சம்பவங்கள் வழக்கத்தை விட அதிகரித்து காணப்படுகின்றன. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெட்ரோல் குண்டு தயாரித்து, வீட்டின் சுவரில் வெடிக்கச் செய்து வீடியோ வெளியிட்ட சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதேபோன்று, யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து, அதை வெடிக்க வைத்த காட்சியை இளைஞரகள் சிலர் இணையத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, விசாரணையில் இறங்கிய காவல்துறையினர், நெல்லை டவுன் அரசன் நகரைச் சேர்ந்த ரஞ்சித் மற்றும் ஆசாத் நகரைச் சேர்ந்த முகமது தவுபிக் ஆகியோரை கைது செய்தனர்.
சமூக வலைதளங்களில் கெத்து காட்டுவதற்காக, யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டை தயாரித்த இவர்கள், இரவு நேரத்தில், அன்னை வேளாங்கண்ணி நகரின் பின்புறமுள்ள வயல் பகுதியில் வெடிக்கச் செய்து வீடியோ பதிவிட்டுள்ளனர். இதையடுத்து, இவர்களுக்கு வெடிகுண்டு தயாரிக்க உதவிய சல்மா என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.