திருநெல்வேலி: திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் அருகில் புதிய தமிழகம் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விளிம்பு நிலை மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேசியதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. தென் தமிழகப் பகுதிகளில் வன்முறைகளை தடுக்க தொழிற்சாலைகளை அதிகரிக்க வேண்டும் என நீதிபதிகள் தலைமையில் அமைக்கப்பட்ட குழுக்கள் பரிந்துரைத்துள்ளன.