சென்னை: கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா கூறும் மருத்துவமனைகள், பரிசோதனை மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என கண்டறிந்து அதன் பின் கருக்கலைப்பில் ஈடுபடுவது குற்றமாகும். ஆனால், தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில், ‘ஸ்கேன்’ பரிசோதனை மையங்களில் சட்டவிரோத கருகலைப்பில் ஈடுபடும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.