மதுரை: இளைஞரணியில் உழைத்தால் திமுகவில் உயர் பதவியை அடையலாம் என அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.
மதுரை விரகனூர் அருகே சுற்றுச்சாலையில் மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. அமைச்சர் பி.மூர்த்தி, கோ.தளபதி எம்எல்ஏ, தெற்கு மாவட்ட செயலாளர் எம்.மணிமாறன் தலைமை வகித்தனர். இக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி பேசியதாவது: இளைஞரணி 2-வது மாநில மாநாட்டை மதுரையில் நடத்த அமைச்சர் பி.மூர்த்தி விரும்பினார்.