புதுக்கோட்டை: தமிழக அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குற்றம் சாட்டினார்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே காலாடிப்பட்டியில் மாற்று கட்சியில் இருந்தபலர் விலகி, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.