தஞ்சாவூர்: அதிமுகவும், பாஜகவும் ஒருபோதும் கூட்டணியை முறித்துக்கொள்ள மாட்டார்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் பாஜக அரசு அறிமுகம் செய்தாலும், உடனடியாக நடைமுறைக்கு வராது என்பது கவலைக்குரிய விஷயம். மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை முடிந்த பின்னர் மகளிருக்கான இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படும் என்ற வரையறையுடன் இயற்றப்பட்டுள்ளது ஏமாற்றத்தை அளிக்கிறது.